Guys, I do not know the Tamil language. Still, I searched and found the meaning of Brahmahathi dosham in Tamil language and sharing here.
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? ஜாதகத்தில் சனியும், குருவும் இணைந்திருந்தால் இந்த தோஷம் உண்டாகும் என்று சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இது சரியா? இந்த தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்?
ஜாதகத்தில் சனியும், குருவும் இணைந்திருந்தால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும் என்பது முற்றிலும் தவறான கருத்து. கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு சனியும், குருவும் ஒரே ராசியில் சஞ்சரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படியென்றால் அந்த ஒரு வருட காலத்தில் பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகிவிடுமா?
ஜாதகத்தில் குருவும், சனியும் இணைந்திருந்தால் அதற்கு குரு-சண்டாள யோகம் என்று பெயர். பிரம்மஹத்தி தோஷத்திற்கும் ஜாதகத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பிராமண நிந்தனையால் வருவது பிரம்மஹத்தி தோஷம். ஒரு பிராமணனை கொலை செய்தாலும் அல்லது அந்த பிராமணன் மனம் நொந்து, இறந்துபோகின்ற அளவிற்கு ஆளாக்கினாலும் இந்த பிரம்மஹத்தி தோஷம் வந்து சேரும்.
பஞ்சமஹாபாதகங்களுக்கு பிராயச்சித்தமே கிடையாது என்கிறது சாஸ்திரம். பஞ்சமஹா பாதகங்களில் முதலிடம் பிடிப்பது, இந்த பிரம்மஹத்யை! பிராம்மண வதை, மது அருந்துதல், குருவின் மனைவியின் மீது ஆசை வைத்தல், தங்கம் திருடுதல், இந்த நான்கினைச் செய்வோருக்கு உதவி செய்தல் ஆகிய இந்த ஐந்தும் பஞ்சமஹாபாதகங்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த ஐந்திற்கும் பிராயச்சித்தம் என்பதே கிடையாது என்கிறது வேதம். இருப்பினும் ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு.
பொதுவாக செய்கின்ற பாவத்தினை மூன்று வகையாக பிரித்து அறிதல் வேண்டும். முதலாவது வகை தெரிந்தே பாவ காரியத்தினைச் செய்தல், இரண்டாவது தெரியாமல் பாவத்தினைச் செய்தல், மூன்றாவது தெரிந்தும், தெரியாமல் செய்தல். இந்த மூன்றாவது வகை சற்றே குழப்புகிறதா? இதைச் செய்வது பாவம் என்று தெரிந்தாலும், வேறு வழியின்றி அந்த பாவத்தைச் செய்வதே தெரிந்தும் தெரியாமல் செய்கின்ற வகை. அதாவது, தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும், ஒரு ஸ்திரீயின் மானம் காப்பதற்காகவும், பல உயிர்களைக் காக்கும் பொருட்டும் வேறு வழியின்றி இந்த பாவத்தைச் செய்வது.
இந்த மூன்றாவது வகையில் செய்கின்ற பாவத்திற்கு பிராயச்சித்தம் உண்டு. உதாரணத்திற்கு மகாபாரத யுத்தத்தில் துரோணர் என்ற பிராமணர் மனம் நோகும் வண்ணம்‘அஸ்வத்தாமா ஹத:’ (அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்) என்ற ஒரு பொய்யைச் சொல்கிறான் தர்மன். மனம் நொந்து வில்லினை கீழே போட்ட அந்த பிராம்மணனைக் கொல்கிறான் அர்ச்சுனன். இவர்கள் இருவரும் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளாகியிருந்தாலும், தர்மத்தினைக் காக்கும் பொருட்டு வேறு வழியின்றி இந்த காரியத்தைச் செய்ததால் அவர்களுக்கு இந்த பிரம்மஹத்தி தோஷத்திற்கான பிரயாச்சித்தம் செய்துகொள்ள முடிந்தது.
வரகுண பாண்டியன் கும்பகோணம்-தஞ்சாவூருக்கு இடையில் உள்ள திருவிடைமருதூர் ஆலயத்திற்குச் சென்று இந்த பிரம்மஹத்தி தோஷத்திற்கான பிராயச்சித்தம் செய்திருக்கிறான் என்கிறது ஸ்தல புராணம். அவ்வாறே பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை திருத்தலத்திற்குச் சென்று சுவாமிநாத ஸ்வாமியை வணங்கி கீழ்க்கண்ட ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து வந்தால் பிரம்மஹத்தி தோஷத்தின் வீரியம் குறையும்.
ஸூப்ரமண்யஸ்ய மஹிமா வர்ணிதும் கேநசக்யதே
யத்ரோச் திஷ்டமபி பஷ்டம் ச்விதரிண சோதயத்ய
ஹோப்ரஹ்மஹத்யா தோஷசேஷம் ப்ராஹ்மணானா மயம் ஹரன்
விரோதேது பரம் கார்யம் இதிந்யாய மாநயத்
இவை எல்லாவற்றையும்விட, இயன்ற வரை மேற்சொன்ன பஞ்ச மஹாபாதகங்களைச் செய்யாமல் இருப்பதே சாலச் சிறந்தது!
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? ஜாதகத்தில் சனியும், குருவும் இணைந்திருந்தால் இந்த தோஷம் உண்டாகும் என்று சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இது சரியா? இந்த தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்?
ஜாதகத்தில் சனியும், குருவும் இணைந்திருந்தால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும் என்பது முற்றிலும் தவறான கருத்து. கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு சனியும், குருவும் ஒரே ராசியில் சஞ்சரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படியென்றால் அந்த ஒரு வருட காலத்தில் பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகிவிடுமா?
ஜாதகத்தில் குருவும், சனியும் இணைந்திருந்தால் அதற்கு குரு-சண்டாள யோகம் என்று பெயர். பிரம்மஹத்தி தோஷத்திற்கும் ஜாதகத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பிராமண நிந்தனையால் வருவது பிரம்மஹத்தி தோஷம். ஒரு பிராமணனை கொலை செய்தாலும் அல்லது அந்த பிராமணன் மனம் நொந்து, இறந்துபோகின்ற அளவிற்கு ஆளாக்கினாலும் இந்த பிரம்மஹத்தி தோஷம் வந்து சேரும்.
பஞ்சமஹாபாதகங்களுக்கு பிராயச்சித்தமே கிடையாது என்கிறது சாஸ்திரம். பஞ்சமஹா பாதகங்களில் முதலிடம் பிடிப்பது, இந்த பிரம்மஹத்யை! பிராம்மண வதை, மது அருந்துதல், குருவின் மனைவியின் மீது ஆசை வைத்தல், தங்கம் திருடுதல், இந்த நான்கினைச் செய்வோருக்கு உதவி செய்தல் ஆகிய இந்த ஐந்தும் பஞ்சமஹாபாதகங்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த ஐந்திற்கும் பிராயச்சித்தம் என்பதே கிடையாது என்கிறது வேதம். இருப்பினும் ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு.
பொதுவாக செய்கின்ற பாவத்தினை மூன்று வகையாக பிரித்து அறிதல் வேண்டும். முதலாவது வகை தெரிந்தே பாவ காரியத்தினைச் செய்தல், இரண்டாவது தெரியாமல் பாவத்தினைச் செய்தல், மூன்றாவது தெரிந்தும், தெரியாமல் செய்தல். இந்த மூன்றாவது வகை சற்றே குழப்புகிறதா? இதைச் செய்வது பாவம் என்று தெரிந்தாலும், வேறு வழியின்றி அந்த பாவத்தைச் செய்வதே தெரிந்தும் தெரியாமல் செய்கின்ற வகை. அதாவது, தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும், ஒரு ஸ்திரீயின் மானம் காப்பதற்காகவும், பல உயிர்களைக் காக்கும் பொருட்டும் வேறு வழியின்றி இந்த பாவத்தைச் செய்வது.
இந்த மூன்றாவது வகையில் செய்கின்ற பாவத்திற்கு பிராயச்சித்தம் உண்டு. உதாரணத்திற்கு மகாபாரத யுத்தத்தில் துரோணர் என்ற பிராமணர் மனம் நோகும் வண்ணம்‘அஸ்வத்தாமா ஹத:’ (அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்) என்ற ஒரு பொய்யைச் சொல்கிறான் தர்மன். மனம் நொந்து வில்லினை கீழே போட்ட அந்த பிராம்மணனைக் கொல்கிறான் அர்ச்சுனன். இவர்கள் இருவரும் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளாகியிருந்தாலும், தர்மத்தினைக் காக்கும் பொருட்டு வேறு வழியின்றி இந்த காரியத்தைச் செய்ததால் அவர்களுக்கு இந்த பிரம்மஹத்தி தோஷத்திற்கான பிரயாச்சித்தம் செய்துகொள்ள முடிந்தது.
வரகுண பாண்டியன் கும்பகோணம்-தஞ்சாவூருக்கு இடையில் உள்ள திருவிடைமருதூர் ஆலயத்திற்குச் சென்று இந்த பிரம்மஹத்தி தோஷத்திற்கான பிராயச்சித்தம் செய்திருக்கிறான் என்கிறது ஸ்தல புராணம். அவ்வாறே பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை திருத்தலத்திற்குச் சென்று சுவாமிநாத ஸ்வாமியை வணங்கி கீழ்க்கண்ட ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து வந்தால் பிரம்மஹத்தி தோஷத்தின் வீரியம் குறையும்.
ஸூப்ரமண்யஸ்ய மஹிமா வர்ணிதும் கேநசக்யதே
யத்ரோச் திஷ்டமபி பஷ்டம் ச்விதரிண சோதயத்ய
ஹோப்ரஹ்மஹத்யா தோஷசேஷம் ப்ராஹ்மணானா மயம் ஹரன்
விரோதேது பரம் கார்யம் இதிந்யாய மாநயத்
இவை எல்லாவற்றையும்விட, இயன்ற வரை மேற்சொன்ன பஞ்ச மஹாபாதகங்களைச் செய்யாமல் இருப்பதே சாலச் சிறந்தது!